வரதட்சணையா?- "மூச்" என்கிறார் ஜெ.
சென்னை:
பெரியார் பிறந்த இந்த மண்ணில் வரதட்சணை என்ற பேச்சே வரக் கூடாது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை-கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டுஜெயலலிதா பேசுகையில்,
தமிழகத்தில் தொண்டர்களே இல்லாமல் தர்பார் நடத்தும் கட்சிகள் உண்டு. தொண்டர்கள் இருந்தும்தங்கள் குடும்பத்துக்காகக் கட்சியை நடத்துகின்ற கட்சிகளும் உண்டு. ஆனால்தொண்டர்களுக்காகவே ஒரு கட்சி நடத்தப்படுகிறது என்றால் அது அதிமுக மட்டுமே.
அதிமுக கழகக் குடும்பத்தினரின் இல்லத் திருமண விழாக்களில் நான் கலந்து கொள்வது எனக்குமகிழ்ச்சி அளிக்கிறது. இன்று மூன்று ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளேன். நான்இப்போது கூறப் போவது இந்த ஜோடிகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்தான்கூறுகிறேன்.
திருமணம் என்பது வாழ்க்கையில் முக்கியமானது. குடும்பம் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கைமகிழ்ச்சியாக இருக்கும். அதேபோல் பெண்ணை மதிக்கிற குடும்பம்தான் உயர முடியும்.
ஒரு கதை சொல்கிறேன். ஒரு பக்தரின் வீட்டுக் கதவை திருமகள் வந்து தட்டுகிறாள். கதவைத் திறந்தபக்தரிடம், "நான் உனக்கு மகளாகப் பிறக்க ஆசைப்படுகிறேன். விருப்பமா?" என்று திருமகள்கேட்டாள்.
அந்த பக்தரோ, "நீ எனக்கு மகளாகப் பிறக்க வேண்டாம். மருமகளாக வா. ஏனென்றால் மகளாகப்பிறந்தால் வேறு வீட்டுக்கு நீ போய் விடுவாய். மருமகளாக வந்தால்தான் என் வீட்டிலேயேஇருப்பாய்" என்றார். உடனே அந்தத் திருமகளும் மருமகள் வடிவத்தில் அவர்கள் வீட்டுக்குள்வந்தாள்.
எனவே வீட்டுக்கு வரும் மருமகளை மாமனாரும் மாமியாரும் குடும்பத்தினரும் திருமகளாகியமகாலட்சுமியாகக் கருதி அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி என்பதற்காக அந்தமருமகளிடமிருந்தோ, அவர்களுடைய குடும்பத்தினரிடமிருந்தோ காரும் பங்களாவும் கேட்டுவிடாதீர்கள்.
பெரியார் பிறந்த இந்த மண்ணில் வரதட்சணை என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது.பெண்ணை மதிக்கிற குடும்பமும் சமுதாயமும்தான் உயரும். ஆணும் பெண்ணும் சமம் என்பதையும்அனைவரும் உணர வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-->