For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்பு: அமெரிக்காவுக்கு பெர்னாண்டஸ் சூடு

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா:

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அமெரிக்கா தலையிட வேண்டியதில்லை,அவர்களுடைய அறிவுரைகளும் தேவையில்லை என்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் ஆவேசத்துடன் கூறினார்.

காஷ்மீரில் கடந்த 24ம் தேதி நடந்த படுகொலைச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்திருந்தஅமெரிக்கா, காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையைமீண்டும் தொடங்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் பாட்னாவில் இன்று நிருபர்களிடம் பேசிய பெர்னாண்டஸ், இதுபோன்றவிஷயங்களில் அமெரிக்காவின் யோசனைகள் தேவையில்லை, இந்தியா அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கவும் இல்லை என்றார்.

இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவை விட நமக்கு நன்றாகவேதெரியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஈராக் போர் விஷயத்தில் இந்தியா தன் நிலையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது என்றும்கூறிய பெர்னாண்டஸ், இந்தப் போரை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது என்றார்.

இந்தியாவுக்கு அமெரிக்கா "ஐஸ்":

இதற்கிடையே இந்தியா ஒரு பெரும் வல்லரசு நாடாக வளர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவர்ணித்துள்ளது.

பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறோம் என்றுதெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கிறிஸ்டினா ரோக்காகூறியுள்ளார்.

ஆனால் ஈராக் மீதான போரை எதிர்க்கும் விஷயத்தில் இந்தியா தெளிவாக உள்ளது. இந்நிலையில்பெர்னாண்டசும் அமெரிக்காவைத் தாக்கிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X