எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாவது வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்து விட்டன. இந்நிலையில்எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
தமிழகம் முழுவதும் சுமார் 6.66 லட்சம் மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளைஎழுதுகின்றனர். இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.
அனைத்துத் தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
தேர்வு கால அட்டவணை:
27.03.2003 - தமிழ் முதல் தாள்
28.03.2003 - தமிழ் 2ஆம் தாள்
31.03.2003 - ஆங்கிலம் முதல் தாள்
01.04.2003 - ஆங்கிலம் 2ஆம் தாள்
03.04.2003 - கணிதம்
07.04.2003 - அறிவியல்
08.04.2003 - சமூக அறிவியல்
-->












Click it and Unblock the Notifications