"மனிதனாக இருங்கள்": புஷ்சுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை:
ஈராக் விவகாரத்தில் தலையைக் கொடுத்து விட்டு விழிக்கும் அமெரிக்கா கெளரவம் பார்க்காமல்போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஈராக் போர் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பயங்கரவாதம் என்றாலே இஸ்லாமியர்கள் என்று உலகம் உருவகப்படுத்திக் கொண்டிருக்கும்வேளையில் இஸ்லாமிய நாடுகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்து அழிக்கும் வேலையில்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கியிருப்பது வருத்தம் தருகிறது.
குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளிடம் இந்த எண்ணம் ஆலகால விருட்சமாக வளர்ந்துவிட்டது.
ஈராக் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இல்லாமல் போருக்கு பச்சைக் கொடிகாட்டி விட்டு இப்போது ஈராக்கையே ரத்த வண்ணமாக மாற்றிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
ஈராக்கில் தலையைக் கொடுத்து விட்டு இப்போது அமெரிக்கா விழி பிதுங்கி நிற்கிறது. இனியும்கெளரவம் பார்க்காமல் உடனடியாக போரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அமெரிக்கா முன்வர வேண்டும்.
வரலாற்றில், அசோக சக்கரவர்த்தி போரிலிருந்து விடுபட்டு வந்த பிறகுதான் அவனை மனிதனாகமதித்தது இந்த உலகம். வெறும் மன்னனாக மட்டும் இருந்து கொண்டு மனிதனாக இல்லாமல் இருந்துஎன்ன பயன்? இதை அமெரிக்கா உணர வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்கருணாநிதி.
-->