For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக் போர்: வைகோவுக்கு வாஜ்பாய் பதில் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஈராக் போர் தொடர்பாகத் தனக்குக் கடிதம் அனுப்பிய மதிமுக பொதுச் செயலாளரான வைகோவுக்குபிரதமர் வாஜ்பாய் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த 15ம் தேதி வாஜ்பாய்க்கு எழுதிய கடிதத்தில், ஈராக்கில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளதால்வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், முடிந்தால் அவர்களைப்பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்றும் வைகோ கோரியிருந்தார்.

இந்தக் கடிதத்திற்குப் பதிலளித்து கடந்த 25ம் தேதி வாஜ்பாய் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாகமதிமுக தலைமை அலுவலகமான "தாயகம்" தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் பணி புரிந்து வரும் அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பிற்கும் தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில்வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

ஈராக் போர் தொடர்பாக சமீபத்தில் டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதீர்மானங்களின் நகலையும் அந்தக் கடிதத்துடன் இணைத்து வைகோவுக்கு அனுப்பியுள்ளார்வாஜ்பாய்.

இந்தக் கடிதம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவிடம் கொடுக்கப்பட்டதாகவும்"தாயகம்" தெரிவித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X