For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்கிடம் 1,000 அதி நவீன டாங்க் தகர்ப்பு ஏவுகணைகள்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

உக்ரைன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளிலிடமிருந்து 1,000 கொர்னெட் ஏவுகணைகளை ஈராக்ரகசியமாக வாங்கிக் குவித்திருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

எடை குறைந்த, ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஏவுகணைகள் தற்போதைய போரில் இரண்டுஅமெரிக்க டாங்கிகளையும் தகர்த்து எறிந்துள்ளன.

இவற்றில் பெரும்பாலான கொர்னாட் ஏவுகணைகள் உக்ரைனிலிருந்து வாங்கப்பட்டவை என்றும்மற்றவை சிரியாவிலிருந்து வாங்கப்பட்டவை என்றும் பென்டகன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சுமார் 500 கொர்னாட் ஏவுகணைகள் பாக்தாத்திற்கு வந்து சேர்ந்ததாகவும்கூறப்படுகிறது.

இந்தியக் கப்பலுக்கு தடை:

இதற்கிடையே ஈராக்கிற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற இந்தியக் கப்பலை உம் காசிர் துறைமுகத்திற்குள்அனுமதிக்க அமெரிக்க படைகள் மறுத்து விட்டன.

இதையடுத்து அந்தக் கப்பல் பாதி வழியிலேயே திரும்பிச் சென்று விட்டதாக ஈராக்கிய செய்திஅமைச்சர் முகமது சயீத் சகாப் கூறினார்.

நேற்று நிருபர்களிடம் பேசிய சகாப், இந்தியா, பிரேசில் உள்பட மூன்று நாட்டைச் சேர்ந்த கப்பல்கள்உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தன. ஆனால் அமெரிக்கப் படைகள் அவற்றைத் தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பி விட்டன என்றார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X