வட கொரியா ஏவுகணை செலுத்தியதா?
டோக்கியோ:
ஈராக் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் வட கொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணைசோதனையை நடத்தியுள்ளது. ஆனால் ஜப்பான் கூறியுள்ள இந்தத் தகவலை தென் கொரியாமறுத்துள்ளது.
எதிரி நாட்டுக் கப்பலைத் தகர்க்கும் திறன் வாய்ந்த இந்த ஏவுகணையை இந்திய நேரப்படி இன்றுகாலை 6.45 மணிக்கு வட கொரியா ஏவி சோதனை நடத்தியது.
சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள கப்பலை இலக்கு தவறாமல் தாக்கவல்லது இந்த ஏவுகணை.
கடந்த பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 10ம் தேதிகளில் அமெரிக்காவின் எதிர்ப்புகள் அனைத்தையும்மீறி இதேபோன்ற ஏவுகணைகளை வட கொரியா வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது.
இந்நிலையில் மீண்டும் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தகவலை ஜப்பான்தான் தெரிவித்தது.
ஆனால் இவ்வாறு ஒரு ஏவுகணை சோதனை நடக்கவே இல்லை என்று தென் கொரியாகூறியுள்ளது. வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததற்கான அறிகுறியே இல்லை என்று அதுதெரிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications