நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
நாகப்பட்டினம்:
இலங்கை கடற்படையினர் சுட்டதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் காயமடைந்தார். மற்றமீனவர்கள் காயமின்றி தப்பினர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச்சென்றனர்.
கோடியக்கரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோதுஇலங்கை கடற்படை படகு அங்கு வந்தது.
அதில் இருந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினம் மீனவர்களை நோக்கி திடீரென்றுதுப்பாக்கியால் சராமாரியாகச் சுட்டனர்.
இச்சம்பவத்தில் ஒரு மீனவர் காயமடைந்தார். மற்ற மூன்று பேரும் காயமின்றி தப்பினர்.காயமடைந்த மீனவர் நாகப்பட்டினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக மீனவர்களைக் கடத்துவதும் அவர்களைத் தாக்குவதும் இலங்கை கடற்படையினருக்கும்அந்நாட்டு மீனவர்களுக்கும் வாடிக்கையாகப் போய்விட்டது. இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடுசம்பவம் நடந்திருப்பது நாகப்பட்டினம் மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-->