ஜெயா பெயரில் சிறந்த விளையாட்டு "கோச்"சுக்கு விருது
சென்னை:
சிறந்த 2 விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு முதல்வர்ஜெயலலிதாவின் பெயரில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும் திட்டத்தை மாநில இளைஞர் நலத் துறை பொறுப்புவகிக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கையை தாக்கல் செய்துசெம்மலை பேசுகையில்,
மாநில அளவில் சிறந்த 2 விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டு அவருக்குமுதல்வர் விருது வழங்கப்படும்.
இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் வேலையில்லாத காரணத்தால் தீவிரவாதத்திற்குப் பலியாவைத்தடுக்கும் பொருட்டு அவர்களது ஆற்றலை விளையாட்டின் பக்கம் திருப்பும் வகையில் பல்வேறு இடங்களில்விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலையில் 15 ஏக்கர் பரப்பளவில் திறந்த வெளி ஸ்டேடியம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறுவிளையாட்டு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் செம்மலை.
-->