தீயணைப்புத்துறை ஊழல்: 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும் கடுங்காவல் தண்டனை
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் தீயணைப்புத் துறைக்கு சாதனங்கள் வாங்கியதில் நடந்த ஊழலில் ஐ.பி.எஸ். அதிகாரிகளானஹரிஹரானே மற்றும் வீரராகவன் ஆகிய இருவரும் குற்றவாளிகளே என தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருவருக்கும் 2 வருடம் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1989 முதல் 1992ம் ஆண்டு வரை இருவரும் அடுத்தடுத்து இந்தத் துறையின் இயக்குனர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் தீயணைப்புத்துறைக்கு ரூ. 1.77 கோடி மதிப்புக்கு பல்வேறு சாதனங்கள் வாங்கப்பட்டன. இதற்கு டெண்டர் விட்டதில்இதில் பெரும் முறைகேடு நடந்தது.
இருவருமே நிஸார்ஸ் என்ற ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கே டெண்டரை வழங்கி அந்த நிறுவன அதிபர் ஜியாதீனிடம் இருந்துபல லட்சத்தை லஞ்சமாகப் பெற்றனர்.
இதையடுத்து அடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு இவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை தனிநீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் முன் நடந்து வந்தது.
இந்த வழக்கில் அவர் இன்று தீர்ப்பளித்தார். நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:
இந்த இரு அதிகாரிகளும் மக்கள் பணத்தை சுருட்டியது உறுதியாகிவிட்டது. இதனால் ஹரிஹரானேவுக்கு ரூ. 50,000மும்வீரராகவனுக்கு ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கிறேன். இருவருக்கும் தலா இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும்விதிக்கிறேன்.
அரசுப் பணத்தை முறைகேடாக சுருட்ட நினைத்த நிஸார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கு 4 வருட கடுங்காவல்தண்டனையும், ரூ. 90,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தீயணைப்புத்துறையின் பியூனான பட்டாபிராமனுக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பில்லை என்பதால் அவரைஇந்த வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்.
ஹரிஹரானே, வீரராகவன் ஆகிய இருவரும் இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அதுவரைஇந்த தண்டனை அமலாக்கத்தை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறேன் என நீதிபதி கூறினார்.
-->
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications