சென்னையில் மண்டையைப் பிளக்கும் கடும் வெயில்!
சென்னை:
சென்னையில் கோடை காலம் சூடு பிடிக்கும் முன்பே கடும் வெயில் அடித்து வருகிறது. இருப்பினும் பயப்படும்அளவுக்கு எதுவும் நேராது என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
வழக்கமாக கோடை காலம் தொடங்கி சில வாரங்கள் கழித்துத்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.ஆனால் சென்னையில் இப்போதே 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. இதனால் வீட்டிற்குள்ளும்இருக்க முடியவில்லை. வெளியிலும் நடக்க முடியவில்லை.
வெயில் இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர்ரமணனிடம் கேட்டபோது,
கடந்த மூன்று ஆண்டுகளில் இதே மாதத்தில் வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி வரை மட்டுமே இருந்தது. ஆனால்இப்போது 38 முதல் 39 டிகிரி வரை வெயில் அடிக்கிறது. ஆனால் இந்த வெயில் இப்படியே நீடிக்கும் என்று கருதத்தேவையில்லை.
கோடை மழைக்கு வாய்ப்புள்ளது. அது பெய்தால் வெயில் குறையத் தொடங்கும். எனவே கடும் வெயில் குறித்துஅச்சப்படத் தேவையில்லை என்றார் ரமணன்.
கடந்த நான்கு நாட்களாக சென்னையில் வெயிலின் அளவு மிகக் கடுமையாக இருக்கிறது. கடந்த 1ம் தேதிமீனம்பாக்கத்தில் 38 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. நேற்று வரை அதே வெப்பநிலையே நீடித்தது.
கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி 41 டிகிரி வெயில் கொளுத்தியது. அதுதான் சமீப காலங்களில் ஏப்ரல்மாதத்தில் அதிக அளவில் பதிவாகிய வெப்பநிலையாகும். அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி 40.1 டிகிரிவெயில் பதிவாகியது.
வெயில் மண்டையைப் பிளப்பதால் சென்னை மக்கள் எரிச்சலுடன்தான் உலாவி வருகிறார்கள்.
-->