தமிழகத்தில் தலித்களுக்கான ரிசர்வ் தொகுதிகள் விரைவில் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டமன்றத்துக்கு அதிக தலித் எம்.எல்.ஏக்களைத் தேர்வு செய்யும் வகையில் அவர்களுக்கான ரிசர்வ்தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தேர்தல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் நிதியமைச்சர் பொன்னையன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொன்யைன் கூறுகையில்,

2026ம் ஆண்டு வரை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள தொகுதி வரையறை ஆணையம்கூறிவிட்டது.

எனவே சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடியாது.

இருப்பினும் ரிசர்வ் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தலாம் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது.தற்போது தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள்உள்ளன. 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

இவற்றில் தாழ்த்தப்பட்டோருக்கான சட்டசபை ரிசர்வ் தொகுதிகளின் எண்ணிக்கை 42 ஆக உள்ளது. இதை 45ஆக உயர்த்தலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல பழங்குடியினருக்கான ரிசர்வ் தொகுதிகளின்எண்ணிக்கை 3லிருந்து 2 ஆகக் குறைக்கவும் பரிந்துரைத்துள்ளது.

இந்த பரிந்துரைகள் ஏற்கப்படும். தலித்களுக்கான ரிசர்வ் தொகுதிகள் 45 ஆக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 4,92,35,702 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2,50,34,660 பேர் பெண்வாக்காளர்கள்.

இதுவரை மொத்தம் 3.28 கோடி வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனஎன்றார் பொன்னையன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+