கல்யாணவீட்டைக்"கலக்கிய"சாப்பாடு!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ராயனூர் பகுதியில், கல்யாண விருந்தில் சாப்பாடு கெட்டுப் போனதால் மாப்பிள்ளைஉள்பட 110 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
மாப்பிள்ளையும் மற்றவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராயனூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நகுலேந்திரன். இவருக்குதிருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு வீட்டிலேயே விருந்து பரிமாறப்பட்டது.
அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும், வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை உள்பட அனைவரும் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
சாப்பாடு கெட்டுப் போய்விட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications