For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கப் படைகள் விரட்டியடிப்பு: விமான நிலையத்தை ஈராக் படைகள் மீட்டன

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

சதாம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை விரட்டி அடித்து அதை ஈராக்கியப்படைகள் மீண்டும் பிடித்துள்ளன.

இத் தகவலை ஈராக்கிய தகவல்துறை அமைச்சர் சைத் அல்- சகாத் தெரிவித்தார். சர்வதேச நிருபர்களை விமானநிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

பாக்தாதில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

நேற்று விமான நிலையத்தை அமெரிக்கப் படைகள் பிடித்தது உண்மை தான். ஆனால், புதிய வகையிலானதாக்குதலை (தற்கொலைத் தாக்குதல்) நடத்தி அதை இன்று மீட்டுவிட்டோம். விமான நிலையத்தில் இருந்தஅமெரிக்கப் படைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டோம்.

இப்போது அபு ஹரீப் மாவட்டத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை விமான நிலையப் பகுதியில் இருந்கும்பின் பக்கமாகவும் சுற்றி வளைத்துள்ளோம். அவர்கள் மீது கடும் தாக்குதல் நடந்து வருகிறது.

அந்தப் படைகளுக்கும் அவர்களது பிற படைகளுக்கும் உள்ள தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது.மரியாதையாக சரணடைந்தால் அவர்கள் உயிருடன் தப்புவார்கள். இல்லாவிட்டால் கொன்று குவிப்போம்.

அதே போலத் தான் நாட்டின் வட பகுதியில் உள்ள அல் ஹிதாயத் அணைக்கட்டுப் பகுதியிலும் எங்களிடம்அமெரிக்கப் படைகள் சிக்கியுள்ளன. அவர்களையும் புதிய வகையிலான தாக்குதல் (தற்கொலைத் தாக்குதல்)நடத்தி சுற்றி வளைத்துள்ளோம். அவர்களை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் காப்பாற்றி அழைத்துச் செல்லஆரம்பித்துள்ளன. அந்தப் படைகளுக்குச் சொந்தமான 4 கவச வாகனங்களையும் கைப்பற்றிவிட்டோம்.

பாஸ்ராவில் இங்கிலாந்துப் படைகள் கடும் தாக்குதலை சந்தித்து வருகின்றன. அங்கு ஒரு அமெரிக்க விமானமும்ஒரு கோப்ரா ரக ஹெலிகாப்டரும் வீழ்த்தப்பட்டுவிட்டது. பாஸ்ராவில் ஈராக்கியப் படைகளுடன் சேர்ந்து சதாம்பிதாயீன், அரபு மக்கள் கட்சி ஆகியவற்றின் போராளிகளும் சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X