For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சதாம் விமான நிலையத்தில் 2 அமெரிக்க வீரர்கள் பலி

By Staff
Google Oneindia Tamil News

பாக்தாத்:

பாக்தாதில் சதாம் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கடும் சண்டையில் 2 அமெரிக்க வீரர்கள்கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விமான நிலையத்தின் ரன் வேயை முதலில் பிடித்த அமெரிக்கப் படைகள் பின்னர் மேலும் பல பகுதிகளைப்பிடித்துள்ளன. இதற்காக நடந்த சண்டையில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டன. ஈராக்கியத் தரப்பில் 320 பேர் வரைஇறந்துவிட்டதாகவும், 500 வீரர்கள் பிடிபட்டதாகவும் அமெரிக்கப் படைகள் கூறியுள்ளன.

அதே போல விமான நிலையத்தின் அருகே ஈராக்கியப் படைகளின் தாக்குதலில் இருந்து தப்ப முயன்று தனதுஜீப்பை கால்வாய்க்குள் விட்ட அமெரிக்க வீரரும் பலியானார். அவருடன் இருந்த வாஷிங்டன் போஸ்ட் நிருபர்மைக்கேல் கெல்லியும் பலியானார். இருவரது உடல்களும் இன்னும் அந்த கால்வாயில் இருந்து மீட்கப்படவில்லை.

சதாம் சர்வதேச விமான நிலையத்தின் கீழே பெரிய பாதாள அறைகள் இருப்பதாகவும் அங்கு ஏராளமானஈராக்கிய வீரர்கள் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X