For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திரிகா நாளை சென்னை வருகை: ஜெயாவை சந்திக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா டெல்லி செல்லும் வழியில் நாளை சென்னை வருகிறார்.

4 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியாவிற்கு வருகிறார் சந்திரிகா.

டெல்லி செல்வதற்கு முன் காலை 9.05 மணிக்கு சென்னை வரும் சந்திரிகா, விமானநிலையத்திலிருந்து நேராக ஆளுநர் மாளிகை செல்கிறார்.

அங்கு ஆளுநர் ராமமோகன் ராவையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப்பேசவுள்ளார் சந்திரிகா.

பின்னர் நாளை மாலை விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் சந்திரிகா. ஜனாதிபதி அப்துல்கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.

துணைப் பிரதமர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும்சந்திரிகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தற்போது நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தைகள் குறித்து சந்திரிகா இந்தியத் தலைவர்களிடம் விவாதிக்க உள்ளார். மேலும் ஈராக்போர் மற்றும் இந்தியா-இலங்கை இடையிலான உறவுகள் குறித்தும் சந்திரிகா பேச உள்ளார்.

சந்திரிகா வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

சந்திரிகாவுடன் முன்னாள் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் உள்ளிட்டஅதிகாரிகளும் இந்தியா வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X