For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணி மேரி கல்லூரி காலவரையின்றி மூடல்: 23ம் தேதி திட்டமிட்டபடி தேர்வுகள் தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் தொடர் போராட்டம் காரணமாக ராணி மேரி கல்லூரிகாலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மாணவிகள் விடுதிகளைக் காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிய சட்டசபை கட்டடம் கட்டுவதற்காக தங்கள் கல்லூரியை இடிப்பதா என்று கொதித்துஎழுந்துள்ள ராணி மேரி கல்லூரி மாணவிகள், அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து தொடர்போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவிகளின் போராட்டம் தீவிரமான போராட்டம் காரணமாக கல்லூரியைக் காலவரையின்றி மூடகல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ராணி மேரி கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இருந்தாலும் வரும் 23ம்தேதி செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டபடி தொடங்கி நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம்அறிவித்துள்ளது.

இந்நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் உடனடியாகத் தங்கள் அறைகளைக் காலி செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்வுகள் 23ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் விடுதி மாணவிகள் எங்கே தங்கி தேர்வுகளைஎழுதுவது என்று மாணவிகள் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X