சதாம், புஷ் கூட்டிய அவசர "போர்க் குழு" கூட்டம்
பாக்தாத்:
பாக்தாத் நகரை அமெரிக்கப் படையினர் முற்றுகையிட்டுள்ள நிலையில் அமெரிக்காவில் அந்நாட்டுஅதிபர் புஷ்சும், ஈராக்கில்ல் அதிபர் சதாம் ஹூசேனும் தங்கள் ராணுவ அதிகாரிகளுடன் அவசரஆலோசனை நடத்தினர்.
சதாம் "போர்க் குழு"வுடன் ஆலோசனை நடத்துவதை ஈராக் தொலைக்காட்சி காட்டியது. ராணுவஉடையில் சதாம் அமர்ந்திருந்தார்.
ஆனால் எந்த இடத்தில அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள் என்று தெரிவிக்கப்படவில்லை.
அதேபோல் அமெரிக்காவில் புஷ்சும் தன் அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் முக்கியஆலோசனை நடத்தினார்.
துணை அதிபர் டிக் செனய், பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவெல், முப்படைகளின் தலைவர் ரிச்சர்ட் மேர்ஸ் உள்ளிட்டவர்களுடன்பேசினார் புஷ்.
மேரிலேண்டில் இருந்தவாறே டெலிகான்பரன்ஸ் மூலம் அவர்களுடன் புஷ் பேசினார்.
இதற்கிடையே ஈராக் போர் எப்போது முடியும் என்பதைப் பற்றி இப்போதைக்கு எதுவும் கூறமுடியாது என்ற ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு கூறினார். இந்தப் போரில் 2,000ஆஸ்திரேலிய வீரர்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->