மதுரையில் அரசு ஊழியர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் அரசு அலுவலகம் அருகேயே அரசு ஊழியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை டி.ஆர்.ஓ. காலனியில் வசித்து வந்தவர் சம்பத்குமார். இவர் வீட்டு வசதி வாரியத்தில்வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவரது அலுவலகத்திற்கு போன் வந்தது. போன் பேசிய பிறகு அலுவலகத்தை விட்டுவெளியே வந்தார் சம்பத்குமார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஒருவர் சம்பத்குமாரை சராமாரியாக வெட்டித் தள்ளினார். பின்னர்அங்கிருந்து அவர் ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சம்பத்குமார் அங்கேயே துடிதுடித்துஇறந்தார்.
அரசு அலுவலகம் அருகிலேயே அரசு ஊழியர் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படுகொலை குறித்து அண்ணாநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications