கோவை பால் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பால் வியாபாரி ஒருவரின் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும்பணத்தைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த கனகராஜ் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர்வியாபார விஷயமாக வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். வீட்டிலும் வேறு யாரும்இல்லை.
வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இன்று அதிகாலைகனகராஜின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.2.5 லட்சம் பணம் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ளநகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு கொள்ளையர்கள் ஓடி விட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கோயம்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துகொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
நேற்று முன்தினம்தான் ஒரே நாளில் கோயம்புத்தூரில் இரட்டைக் கொள்ளைகள் நடந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் கொள்ளைகளால் கோயம்புத்தூர் மாநகர மக்கள் பீதியில்ஆழ்ந்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications