அமெரிக்க விமானம் தாக்கி அமெரிக்க வீரர்களே பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
மொசூல் நகருக்கு அருகே அமெரிக்க விமானம் தவறுதலாகக் குண்டு வீசியதில் அது குர்திஸ் படைக்குழுவினர் மீது விழுந்து வெடித்து அமெரிக்க வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மொசூல் நகருக்குத் தென்கிழக்கே நேற்று அமெரிக்க போர் விமானம் ஒன்று குர்திஸ்படையினர் மீது தவறுதலாக குண்டு வீசித் தாக்கி விட்டது.
சமீபத்தில் ஈராக் படையினரிடமிருந்து கைப்பற்றிய திபெர்ஜான் நகரை நோக்கி குர்திஸ் படையினர்சென்று கொண்டிருந்தபோதுதான் குண்டு வீசப்பட்டது.
இதில் சில அமெரிக்க வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ராணுவமும் இதைஉறுதி செய்துள்ளது. இச்சம்பவத்தில் பலர் படுகாயமடைந்தனர்.
ஈராக் போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க, பிரிட்டிஷ் படையினர் பல முறை தங்கள்படையினர் மீதே தவறுதலாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் இது லேட்டஸ்ட்.
-->












Click it and Unblock the Notifications