For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் டி.ஆர். பாலுவை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர். பாலு பாதுகாவலரால்தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும் அவரைத் தள்ளிவிட்டு பாலு விமான நிலையத்திற்குள்சென்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரகர்கள், அதிமுக்கியப் பிரகர்களிடம் பாதுகாப்புசோதனைகள் நடத்தப்படுவதில்லை. அதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இருப்பினும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர்(சி.ஐ.எஸ்.எப்.) இதை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற விதி மீறல் சம்பவம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில்நடந்துள்ளது. பாலு மாலை 6 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தார். 6.40 மணிக்கு டெல்லிசெல்லும் விமானத்தில் அவர் செல்லவிருந்தார்.

ஆனால் விமான நிலைய நுழைவாயிலில் அவர் நுழைந்தபோது அங்கிருந்த ஒரு பாதுகாவலர்,பாலுவை தடுத்து நிறுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத பாலு அந்தக் காவலரை விலக்கி விட்டுகிளம்ப முயன்றார்.

இருப்பினும் அந்தக் காவலர் விடாமல் பாலுவை நிறுத்தி அவரைச் சோதனை செய்ய முயன்றார்.இதையடுத்து பாலு வலுவாக அவரைத் தள்ளிவிட்டு உள்ளே சென்றார்.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X