அமெரிக்க வீரர்களுக்கு கருவிகள் வழங்கும் இந்திய நிறுவனம்
பெங்களூர்:
ஈராக்கில் போரில் ஈடுபட்டுளள அமெரிக்க வீரர்களுக்குத் தேவைப்படும் இரத்த மாற்று சிகிச்சைக்கானகருவிகளை இந்திய நிறுவனம் வழங்கி வருகிறது.
போர் முனையில் பயன்படும் வகையில் இந்தக் கருவிகள் பேட்டரியில் இயங்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்கு மட்டுமின்றி காயமடைந்த பல ஈராக்கியர்களுக்கும் ரத்தம் ஏற்ற இந்தக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதார ஆப்டோ சர்க்யூட்ஸ் நிறுவனத் தலைவர் ரம்னானி தெரிவித்தார்.
போர் எதிர்ப்பு தீர்மானம்: ஒருவழியாய் நிறைவேற்றம்
இந் நிலையில் ஈராக் மீதான போரைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஒருவழியாய் தீர்மானம்நிறைவேறியது.
இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றவும் அமெரிக்காவைக் கண்டிக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு மறுத்தது.இதனால் எதிர்க் கட்சிகள் அமளியில் இறங்கி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தன. இதையடுத்து ஒருவழியாய் போருக்கு எதிராக ஒருமித்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தை சபாநாயகர் மனோகர் ஜோஷி படித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈராக்கை அமெரிக்கா தாக்கியது கண்டிக்கத்தக்கது.உடனடியாகப் போரை நிறுத்திவிட்டு அமெரிக்க- பிரிட்டிஷ்படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும், ஈராக்கின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்நாட்டின் இறையாண்மைக்கு தீங்கு நேரக் கூடாது. ஐ.நா. தலைமையில் தான் அங்கு மறுசீரமைப்புப் பணிகள்நடக்க வேண்டும்.
சதாமின் ஆட்சியை நீக்க ராணுவரீதியில் நடவடிக்கை எடுத்தது தவறு. போர் குறித்து கவலை தெரிவிக்கும்நாடாளுமன்றம் ஈராக்கிய மக்களுக்கு முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. ஈராக்குக்கு ரூ. 100 கோடி அளவுக்குமருந்து, உணவுப் பொருள்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் கோரின. அதை பா.ஜ.க. அரசுமறுத்தது. இதையடுத்து இரு தரப்பினரும் பேசி இத் தீர்மான வாசகங்களை முடிவு செய்தனர்.
போர் முடிவதற்கு முன்பாகவவாது தீர்மானம் போட்டதே மத்திய அரசு!
-->












Click it and Unblock the Notifications