ஜெயா டி.வி. நிருபர்கள் விரட்டியடிப்பு
சென்னை:
ராணி மேரி கல்லூரி மாணவிகளின் போராட்டத்தைப் படம் பிடிக்க வந்த ஜெயா டி.வி. குழுவினரை அவர்கள்விரட்டி அடித்தனர்.
தங்கள் போராட்டம் குறித்து ஜெயா டி.வி. தவறான தகவல்களை ஒளிபரப்பி வருவதாக மாணவிகள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் ஜெயா டி.வி. குழுவினர் மாணவிகளின் போராட்டத்தைப் படம் பிடிப்பதற்காகச் சென்றனர். ஆனால்அவர்களை உள்ளே நுழைய விடாமல் மாணவிகள் தடுத்தனர்.
அனைத்து மாணவிகளும் கைகோர்த்து வாசலை மறித்து நின்று கொண்டார்கள். இதையடுத்து ஜெயா டி.வி.குழுவினர் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றனர்.
சாலையை அவாய்ட் செய்யும் ஜெ:
இந்நிலையில் தலைமைச் செயலகம் செல்வதற்கான கடற்கரைச் சாலை வழியை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்து வருகிறார்.
தன்னுடைய போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கடற்கரைச் சாலை வழியாகத்தான் ஜெயலலிதா காரில் செல்வது வழக்கம்.
ஆனால் கடந்த 4ம் தேதி அவ்வழியாக ஜெயலலிதாவின் கார் சென்றபோது அதை வழிமறிக்க மாணவிகள் முயற்சி செய்தனர். ஆனால் கார்நிற்காமலேயே சென்று விட்டது.
அதிலிருந்து கடற்கரைச் சாலையில் செல்வதை ஜெயலலிதா தவிர்த்து வருகிறார். அண்ணா சாலை வழியாகவே கோட்டைக்குச் சென்று வருகிறார் அவர்.
-->