அமெரிக்க தாக்குதலில் 3 நிருபர்கள் பலி
தோஹா:
பாக்தாத்தில் உள்ள அல்-ஜசீரா டி.வி. நிலையத்தை அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் ஒரு நிருபர்கொல்லப்பட்டார். அதே போல சர்வதேச பத்திரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல் மீது அமெரிக்க பீரங்கிகள்நடத்திய தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன கேமராமேனும் ஸ்பெயின் கேமராமேனும் கொல்லப்பட்டனர்.மேலும் 4 நிருபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் ஒரு அமெரிக்க ஏவுகணை இன்று காலை பாக்தாதில் உள்ள அல்-ஜசீரா டி.வி. நிலையத்தைத் தாக்கியது.இதில் அந்த டி.வியின் நிருபர் தாரிக் அயூப் மற்றும் ஊழியர் ஜூஹிர் அல்-ஈராக்கி ஆகிய இருவரும்படுகாயமடைந்தனர்.
இருவரும் உடனடியாக காரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் தாரிக் சிகிச்சைபலனளிக்காமல் இறந்தார்.
அதே போல பாக்தாதில் சர்வதேச நிருபர்கள் தங்கியுள்ள பாலஸ்தீன ஹோட்டல் அமெரிக்க பீரங்கிப் படைகளின்தாக்குதலுக்கு உள்ளானது இதில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன கேராமேன் தராஸ் புரோட்யுஸ்க், ஸ்பெயின் டிவிகேமராமேன் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று நிருபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதேபோல் பாக்தாத்தில் உள்ள அபு தாபி டி.வி. நிறுவன அலுவலகமும் அமெரிக்க ஏவுகணையால் கடுமையாகத்தாக்கப்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் தங்களுடைய டி.வி. நிருபர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
-->












Click it and Unblock the Notifications