சதாம், மகன்கள் மீது குண்டுவீச்சு: கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்:

அதிபர் சதாம் ஹூசேனும் அவரது இரு மகன்களும் ஒரு இடத்தில் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்துஅந்த இடத்தின் மீது பங்கர் பஸ்டர் ரக அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்க விமானங்கள் வீசித் தாக்குதல்நடத்தின.

பாக்தாதின் மேற்கே உள்ள அல் மன்சூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் பாதாள அறையில் சதாம் இருப்பதாகஅமெரிக்க உளவுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பி-1 ரக அதிக சக்தி வாய்ந்த குண்டுகளைவீசும் விமானங்கள் அந்த இடத்தைத் தாக்கின.

ஜி.பி.யு.-31 எனப்படும் தரையைத் துளைக்கும் குண்டுகளையும் பங்கர் பஸ்டர்கள் எனப்படும் 2,000 பவுண்ட்எடை கொண்ட பாதாள அறைகளை சிதைக்கும் குண்டுகளையும் விமானங்கள் அந்த இடத்தில் வீசித் தாக்குதல்நடத்தின. இதனால் மிக பலத்த சத்தம் எழுந்தது. அந்தப் பகுதியின் அருகே இருந்த 3 கட்டடங்கள் உடைந்துதரைமட்டமாயின. தரையில் 18 மீட்டர் ஆழத்துக்கு பெரும் பள்ளம் ஏற்பட்டது. மேலும் பல கட்டடங்களும்அதிர்ந்தன.

இத் தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் சதாம் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் ஆனால்அங்கிருந்த முக்கிய ராணுவத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அமெரிக்க உளவுப்பிரிவுகள் கருதுகின்றன.

மேலும் பாக்தாதை ஒட்டியுள்ள டைக்ரிஸ் நதியின் கரையில் உள்ள சதாம் மாளிகையிலும் தாக்குதல்நடத்தப்பட்டது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+