சரணடைய மாட்டோம்: ஈராக்
பாக்தாத்:
அமெரிக்காவிடம் சரணடைய மாட்டோம் என ஈராக் அறிவித்துள்ளது.
அவர் கூறுகையில்,
எங்கள் நாட்டுக்குள் ஊடுருவியவர்களை நாங்கள் கொல்வோமே தவிர சரணடையும் பேச்சுக்கே இடமில்லை. விரைவில் அவர்கள் தான்சரணடைவார்கள். அப்படிப்பட்ட நிலையை உருவாக்குவோம். சரணடையாவிட்டால் இங்கேயே அவர்கள் செத்து மடிவார்கள்.
பாக்தாத் நகர வீதிகளிலும் ஈராக்கின் பல பகுதிகளிலும் இப்போது அமெரிக்கப் படைகள் தங்களது டாங்குகளுக்குள்ளேயேசிறைபட்டிருக்கிறார்கள். பாக்தாத்துக்குள் நுழைந்துள்ள அமெரிக்கப் படைகளின் சப்ளை வழிகளை எங்கள் படைகள் அடைத்துவிட்டன.
இப்போது எங்களது கமாண்டோ படைகள் அவர்களை பாக்தாதுக்குள்ளேயே வைத்து கொன்று குவிக்கத் திட்டமிட்டுள்ளன. ஈராக்கியவீரர்களைக் கொல்ல முடியாத அமெரிக்கப் படைகள் அப்பாவிகளைக் கொன்று குவித்து வருகின்றன. இதன் மூலம் எங்களை மிரட்டிவிடமுயல்கிறார்கள் என்றார் சகாப்.
ஈராக்கில் இதுவரை நடந்த சண்டையில் 89 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது. பிரிட்டிஷ் தரப்பில் 30பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-->