For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு ஊழியர்களுடன் தமிழக அரசின் நிதித் துறை செயலாளர் நாராயணன் நடத்தியபேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பறிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளை திரும்பத் தரக் கோரி அரசு ஊழியர் ஒன்றியம் உள்ளிட்ட சிலஅரசு ஊழியர் அமைப்புகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதையடுத்து அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துகடந்த 5ம் தேதி அரசு ஊழியர் சங்கங்களுடன் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்பேச்சவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது.

இந்நிலையில் நேற்று நாராயணனுடன் அரசு ஊழியர்கள் பேச்சு நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர்ஒன்றியம், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு (ஜாக்டோ-ஜியோ) உள்ளிட்டஅமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு அமைப்பினருடனும் நாராயணன் தனித் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுஊழியர்களின் 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்கள் சுமூகமாகவே நடந்ததாகவும், முன்னேற்றம் தென்படுவதாகவும் இரு தரப்பினரும்தெரிவித்தனர். இன்றும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று தெரிகிறது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X