For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோ விலக மாட்டார்: பா.ஜ.க. நம்பிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வைகோ விலக மாட்டார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோ அந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த விதம் குறித்து வைகோ கடும் அதிருப்தியுடன் உள்ளார்.

விடுதலைப்புலிகளை ஆதரித்து வைகோ பேசியது பொடா சட்டத்தை எதிர்க்கும் செயல்தான் என்று மத்திய அரசுபதில் மனு தாக்கல் செய்தது. இது மதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தமிழக அரசின் வழக்கறிஞராக உள்ள கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மூலம் ஜெயலலிதாவும் அவருக்கு வேண்டியடெல்லி தலைவரும் (அத்வானி) சேர்ந்து எனக்கு எதிராக மனு செய்தனர் என வைகோ கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று நிருபர்களிடம் மல்ஹோத்ரா பேசுகையில், முதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதில் தவறுநேர்ந்து விட்டது உண்மைதான். இதற்காக வைகோ தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவார் என்றுஅர்த்தம் இல்லை என்றார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X