வேலூரில் நவீன சுயம்வரம்: பெண்கள் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூரில் நடந்த நவீன சுயம்வர நிகழ்ச்சியில் விதவைகள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள்ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

வேலூரில் உள்ள சங்கமம் பன்னாட்டு திருமண தகவல் மையம் சார்பில் இந்த சுயம்வரம்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சுயம்வரத்தில் 200க்கும் அதிமானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் பெண்களே அதிகம்என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, விதவைகளும் விவாகரத்து பெற்ற பெண்களும் இதில் அதிகம்கலந்து கொண்டனர்.

சுயம்வரத்திற்கு வந்திருந்த ஆண்களும், பெண்களும் மேடையில் அறிமுகம்செய்துவைக்கப்பட்டனர். அறிமுகம் முடிந்ததும் அவரவர் விருப்பத்திற்கேற்ப துணையைத்தேர்ந்தெடுத்து, ஒருவருக்கொருவர் தனியாகச் சந்தித்துப் பேசி திருமணம் செய்து கொள்வது பற்றிமுடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குப் பிடித்திருந்தவர்களைத் தேர்ந்தெடுத்துஅடுத்தகட்ட விஷயங்கள் குறித்துப் பேசினர்.

எத்தனை ஜோடிகள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர் என்பது குறித்து இனிமேல்தான்தெரியும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+