உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
சென்னை:
ராணி மேரி கல்லூரி பாழடைந்து, இடிந்து போகும் நிலையில் உள்ளதாலேயே அங்கு தலைமைச் செயலகம் கட்டமுடிவு செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியை இடிக்கக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் சங்கம்,மாணவர்கள் சார்பில் இதுவரை மொத்தம் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கலிபுல்லா ஆகியோர் அடங்கிய முதன்மைடிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசின் பொதுத் துறை செயலாளர் பிச்சாண்டி சார்பில் ஒரு விளக்க மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவில்,
தற்போதைய தலைமைச் செயலக கட்டடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாலும் அந்தக் கட்டடத்தில்தொடர்ந்து வேலை செய்தால் ஊழியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இருப்பதாலும் புதியதலைமைச் செயலகம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் ராணி மேரி கல்லூரியும் பாழடைந்து போய் விட்டதால் அதை இடித்து விட்டு அங்கு புது தலைமைச்செயலகம் கட்ட அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
ராணி மேரி கல்லூரியை இடிப்பது அரசின் கொள்கை முடிவு. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. எதிர்த்துவழக்கு தொடரவும் முடியாது என்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மெரீனா கடற்கரையோரம் உள்ள கட்டடங்கள் அனைத்தும்கடலோர பாதுகாப்பு மற்றும் முறைப் படுத்துதல் சட்டத்தின் கீழ் வருகின்றன. எனவே இங்கு புதிய கட்டடம்கட்டுவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-->












Click it and Unblock the Notifications