போராட்டத்தில் தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்கள்
சென்னை:
தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று கோரி தமிழகம் முழுவதும் இன்றுஅரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு தனியார் மருத்தவக் கல்லூரிகளைத் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு அரசுமருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் அவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவ,மாணவிகளும் இன்று மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅப்போது அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
எம்.பி.பி.எஸ். மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும்இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று முழுவதும் அவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
கோயம்புத்தூரிலும் 100 பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட 610 மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள்கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரிக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.
அதே போல மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தினர். திருச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம்வரை கண்டனப் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு தந்தனர்.
சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளும் இன்று வகுப்புக்களைப்புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-->












Click it and Unblock the Notifications