இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது
டெல்லி:
வரும் 15ம் தேதிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறையும் என்று மத்தியபெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக் கூறியுள்ளார்.
ஈராக் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டே வந்தன.
இந்நிலையில் வரும் 15ம் தேதிக்குள் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும் என ராம் நாயக்தெரிவித்துள்ார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது அவர் பதிலளிக்கையில்,
ஈராக் போர் கிட்டத்தட்ட முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சர்வதேசமார்க்கெட்டிலும் பெட்ரோல், டீசல் விலைகள் சரியத் தொடங்கியுள்ளன.
ஒரு பேரலுக்கு 32.56 டாலர்கள் என்ற கச்சா எண்ணெயின் விலை நேற்று 24.14 டாலர்களாகக்குறைந்துள்ளது.
இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் 15ம் தேதிக்குள் இந்தியாவிலும்பெட்ரோல், டீசல் விலைகள் குறையும். இது தொடர்பான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள்விரைவில் வெளியிடும் என்றார் ராம் நாயக்.