இலங்கை அகதிகளிடம் இந்திய வாக்காளர் அடையாள அட்டைகள்!
ராமநாதபுரம்:
இலங்கை அகதிகளிடமிருந்து ஏராளமான இந்திய வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன.
இலங்கையில் இனக் கலவரம் வெடித்தது முதல் ஏராளமான தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாகவந்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில்அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
விருப்பப்பட்டோர் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குச் சென்று தனியாகவும் வசித்துக் கொள்ளஅனுமதிக்கப்பட்டனர்.
அப்படி குடியேறிய அவர்கள் இந்திய குடிமக்களைப் போலவே அனைத்து வசதிகளையும்அனுபவித்தனர். இவர்களில் பலர் தேர்தல்களிலும் ஓட்டுப் போட்டுள்ளனர். பலரிடம் வாக்காளர்அடையாள அட்டை கூட உள்ளது.
இது குறித்துத் தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் போலீஸார் வாலிநோக்கம், சாயல்குடி, உச்சிப்புளி,பெருங்குளம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 15 அகதிகளிடமிருந்து ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன.
-->