சட்டசபை தொகுதிகளில் விரைவில் மாற்றம்வரும்: அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகள், 39 மக்களவைத் தொகுதிகளில் சம அளவில்வாக்காளர்கள் இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் பொன்னையன்சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்துப் பேசுகையில்,
தொகுதிகள் நிர்ணயக் குழு ஆலோசனையின் பேரில் தொகுதிகளின் வரையறையில் மாற்றங்கள்கொண்டுவரப்படும். அதன்படி 234 சட்டசபைத் தொகுதிகள், 39 மக்களவைத் தொகுதிகளில் சரிசமமாக வாக்காளர்கள் இருக்கும் வகையில் தொகுதிகள் மாற்றி அமைக்கப்படவுள்ளன.
அந்த வகையில் பழங்குடியினருக்கான 3 தொகுதிகளில் ஒன்று குறையும். மேலும்தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவர்களுக்கான 2 தொகுதிகள் இனி 4தொகுதிகளாக அதிகரிக்கப்படும்.
நாடாளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளை அதிகரிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்குஇல்லை. இது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் பொன்னையன்.
-->