அழகிரி, ஸ்டாலின் ஆதரவாளர்கள் தனித்தனியாக போராட்டம்
மதுரை:
திமுக இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதற்குஎதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அக்கட்சியினர் இரு பிரிவாக சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
மதுரை திமுக பிளவு உலகறிந்த விஷயம். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் தனித்தனியாகசெயல்பட்டு காங்கிரஸ் கோஷ்டிப் பூசல்களைக் கூடப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள் மதுரைதிமுகவினர்.
நேற்றும் அதுபோல்தான் நடந்தது. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவருடையஆதரவாளர்கள் தனியாகவும், அழகிரியின் ஆதரவாளர்கள் தனியாகவும் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
பெரியார் பஸ் நிலையம் அருகே அழகிரியின் ஆதரவாளர்கள் (அதிகம் போனால் 10 பேர்) சாலைமறியல் செய்ய முயன்று, கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலின் ஆதரவாளர்களான மதுரை மேயர் ராமச்சந்திரன், வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர்சமயநல்லூர் செல்வராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் அதே பெரியார் பஸ்நிலையத்தின் மற்றொரு பக்கத்தில் சாலை மறியல் செய்தனர். அவர்களையும் போலீசார் கைதுசெய்தனர்.
இந்த மறியலில் அழகிரியும் கலந்து கொள்ளப் போவதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் வரவே இல்லை.
இன்றும் சாலை மறியல்:
இதற்கிடையே ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் இன்றும் திமுகவினர் சாலை மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்களில்ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் தி. நகர், யானைக் கவுனி பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரைப் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூரில் திமுகவினர் கண்டனப் பேரணி நடத்தினர். நகராட்சி அலுவலகம் முன்பாக முதல்வர்ஜெயலலிதாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி. மணி தலைமையில் போராட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்ட திமுக தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
-->