மேலும் 2 திமுக எம்.எல்.ஏக்கள் கைது
சென்னை:
ராணி மேரி கல்லூக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி மேலும் 2 திமுக எம்.எல்.ஏக்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ராணி மேரி கல்லூரி வாட்ச்மேனை மிரட்டி, கேட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு திமுக இளைஞர்அணி செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் புகுந்ததாக கல்லூயின் புதிய முதல்வர்போலீசில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஸ்டாலின் வீட்டில் புகுந்துபோலீசார் அவரைக் கைது செய்தனர். அவருடன் பொன்முடி, ஜே. அன்பழகன் மற்றும் ஹூசேன்ஆகிய திமுக எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மேலும் 2 திமுக எம்.எல்.ஏக்களையும் போலீசார் கைது செய்தனர். திமுக கொறடாவானஇள. புகழேந்தி மற்றும் ஏ.வி. வேலு ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் பின்னர் திருச்சி சிறைக்குமாற்றப்பட்டனர்.
-->