கட்டண வசூல்: தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை கடும் எச்சரிக்கை
சென்னை:
அடுத்த செமஸ்டருக்கான கல்விக் கட்டணங்களை மாணவ, மாணவிகளிடமிருந்து வசூலிக்கும்தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் அடுத்த செமஸ்டருக்கான கல்விக்கட்டணங்களைக் கட்ட வேண்டும் என மாணவ, மாணவிகளை வற்புறுத்தி வருவதாகத் தகவல்கிடைத்துள்ளது.
இந்தக் கட்டணங்களைக் கட்டாத மாணவ, மாணவிகளுக்கு தற்போது நடந்து வரும் செமஸ்டர்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைக் கொடுக்க அந்தக் கல்லூரி நிர்வாகங்கள் மறுப்பதாகவும்கூறப்படுகிறது.
இதையடுத்து இதுபோன்ற தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம்கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர்பாலகுருசாமி கூறுகையில்,
அடுத்த செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை இப்போதே வசூலிப்பது மிகவும் தவறான செயலாகும்.
மேலும் ஹால் டிக்கெட்டை மாணவ, மாணவிகளுக்குக் கொடுக்காமல் நிறுத்தி வைக்கும் உரிமைஅண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வாணையாளருக்கு மட்டுமே உள்ளது.
இதனால் ஹால் டிக்கெட் கிடைக்காத மாணவ, மாணவிகள் தற்போது நடந்து வரும் செமஸ்டர்தேர்வில் சரியாகக் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
எனவே இதுபோன்ற செயல்களில் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் ஈடுபடக் கூடாது.இத்தகைய கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் பாலகுருசாமி.
-->