நாளை பிறக்கிறது "சுபானு" ஆண்டு: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
தமிழ்ப் புத்தாண்டான "சுபானு" ஆண்டு நாளை பிறப்பதையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதாஉள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
"சித்ரபானு" இன்றுடன் முடிந்து நாளை "சுபானு" ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டையொட்டிதமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் இன்று நள்ளிரவு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நாளை நடைபெறஉள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்குத் தலைவர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், காவிரி நீரை உரிமையுடன் போராடிக் கேட்டுப் பெறவேண்டும் என்ற தமிழக மக்களின் ஆசை இந்த ஆண்டாவது நிறைவேறட்டும் என்றுவாழ்த்தியுள்ளார்.
நாளை புதிதாகப் பிறக்கும் "சுபானு" ஆண்டில் தமிழகத்தில் ஜனநாயக ஒளி வெள்ளம் பெருகிஓடட்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ வாழ்த்தியுள்ளார்.
இன்றுடன் முடிவடையும் "சித்ரபானு" ஆண்டுடன் சிலருடைய பழிவாங்கும் போக்கும் சேர்ந்துமறைய வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட்செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்துள்ளனர்.
-->