தமிழ்ப் புத்தாண்டு: கோவை மாரியம்மனுக்கு ரூ.10 லட்சத்தில் பண மாலை
சென்னை:
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி கோவையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில்வீற்றிருக்கும் அம்மனுக்கு ரூ.10 லட்சம் நோட்டுக்களால் ஆன பணமாலை அணிவிக்கப்பட்டது.
"சுபானு" ஆண்டு பிறந்ததையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் புத்தாண்டுவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்றன. கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
சென்னையில் வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர்கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருதீஸ்வரர் கோவில் என அனைத்துப் பெரியகோவில்களிலும் நேற்று பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.
புத்தாண்டையொட்டி வித்தியாசமான வழிபாடுகளும் நடந்தன. கோயம்புத்தூரில் காட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு பண மாலை அணிவிக்கப்பட்டது.
ரூ.10 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் மாலையாகத் தொடுக்கப்பட்டு அம்மனுக்குஅணிவிக்கப்பட்டது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள கோயம்புத்தூர்-புளியகுளம்விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
இதற்கிடையே மலையாளப் புத்தாண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. "விஷு" என்று அழைக்கப்படும் இந்தப் புத்தாண்டையொட்டிஅம்மாவட்டத்தில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் 18 கோவில்களில் அன்னதானம்:
இதற்கிடையே தமிழகத்தில் கோவில் அன்னதானத் திட்டத்தின் கீழ் மேலும் 18 கோவில்களில் நேற்றுஅன்னதானத் திட்டம் தொடங்கியது.
சென்னையில் கே.கே. நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இந்து அறநிலையத் துறைஅமைச்சர் பி.சி. ராமசாமி அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் இத்திட்டத்தைஅமைச்சர் ஜெயக்குமார் தொடங்கினார்.
இவற்றுடன் சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 162 கோவில்களில் அன்னதானத் திட்டம்அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->