For Quick Alerts
For Daily Alerts
Just In
கர்நாடகத்தில் விபத்து: தமிழக பக்தர் பலி
மணிப்பால் (கர்நாடகா):
கர்நாடகத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
புதுக்கோட்டையிலிருந்து கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் கொல்லூரில் உள்ள கோவிலுக்கு ஒருகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
மங்களூரிலிருந்து ஒரு டாக்சி மூலம் அவர்கள் கொல்லூருக்குச் சென்றனர். பாங்கலா என்றஇடத்திற்கு அருகே ஒரு பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று அந்த டாக்சிபாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பாலத்தில் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடையபேத்திகளான நர்மதா, நந்திதா மற்றும் நிவேதிதா உள்ளிட்ட 9 பேர் இவ்விபத்தில்படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
Comments
Story first published: Tuesday, April 15, 2003, 5:30 [IST]