சித்ரா பெளர்ணமி: மேல்மருவத்தூரில் வேள்வி நடத்திய சசிகலா
மேல்மருவத்தூர்:
சித்ரா பெளர்ணமியையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலில் நடந்த வேள்விபூஜையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். வேள்வியைத் துவக்கி வைத்ததுடன் அவரே வேள்வியும் நடத்தினார்.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று 1008 யாகக் குண்டங்கள்அமைக்கப்பட்டு வேள்வி நடத்தப்பட்டது. பிறந்துள்ள சுபானு தமிழ் ஆண்டு சுப ஆண்டாகத்திகழவும் மக்கள் அனைத்து வளமும் பெறவும் ஆதிபராசக்தியை வேண்டி இந்த வேள்விநடைபெற்றது.
சித்தர் பீடத்துக்கு வருகை தந்த பங்காரு அடிகளார் சுவாமிகளுக்கு பாதபூஜை நடத்தப்பட்டுசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆதிபராசக்திகருவறையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நேற்று மாலை 3.25 மணிக்கு பங்காரு அடிகளார் தலைமையில் பிரதான யாக குண்டத்தில்கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையைத் துவக்கி வைத்தார் சசிகலா. இதைத் தொடர்ந்து மற்ற யாககுண்டங்களிலும் வேள்வி வளர்க்கப்பட்டது.
சசிகலாவுடன் அவருடைய அண்ணன் மகன் திவாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வேள்விபூஜையில் கலந்து கொண்டனர்.
மூன்று பேரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மந்திரங்களை உச்சரித்து பயபக்தியுடன்வேள்வி நடத்தினர்.
பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைச் செல்விஉள்ளிட்டவர்கள் இந்த வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர்.
-->