விருத்தாசலம்-வடலூர் இடையே அகல ரயில் பாதை திறப்பு
விருத்தாசலம்:
விருத்தாசலத்திற்கும் வடலூருக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதையைரயில்வே துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தொடங்கி வைத்தார். மற்றொரு இணைஅமைச்சரான ஏ.கே. மூர்த்தி கொடியசைத்தார்.
அகல ரயில் பாதையைத் தொடங்கி வைத்து பண்டாரு பேசுகையில்,
நடப்பு 2003-04ம் ஆண்டை பயணிகளைத் திருப்திப்படுத்தும் ஆண்டாகக் கடைப்பிடித்து வருகிறதுஇந்திய ரயில்வே.
தென்னக ரயில்வே மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த ஆண்டு மொத்தம் ரூ.365 கோடியை மத்தியஅரசு ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.90.21 கோடி அகல ரயில் பாதைத் திட்டங்களுக்காகப்பயன்படுத்தப்படுகிறது.
ரயில்கள் மூலம் முக்கியத் துறைமுகங்களை இணைக்கும் பணி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதுஎன்றார் பண்டாரு.
பின்னர் மூர்த்தி பேசுகையில், விருத்தாசலம்- வடலூர் அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்துஇன்று இப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
அதேபோல் சேலம்-கடலூர் இடையேயான 191 கி.மீ. பாதையை ரூ.198.68 கோடி செலவில் அகலரயில் பாதையாக மாற்றும் பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.
இதற்கிடையே சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமார்,ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படாது என்றுஉறுதி அளித்தார்.
-->