மீண்டும் "ஜீவ சமாதி" முயற்சியில் கரூர் சாமியார்
கரூர்:
கரூர் அருகே உள்ள தான்தோன்றி மலையில் ஆசிரமம் வைத்துள்ள பாலுச்சாமி என்ற சாமியார்மீண்டும் ஜீவ சமாதி அடைவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
தான்தோன்றி மலையில் கடந்த 40 ஆண்டுகளாக ஆசிரமம் வைத்துள்ளவர் பாலுச்சாமி என்றசாமியார். தான் ஜீவ சமாதி அடையப் போவதாக சமீபத்தில் அறிவித்து பெரும் பரபரப்பைஏற்படுத்தினார்.
அவரைக் குழிக்குள் தள்ளி மூடுவதற்குத் தயாராக இருந்தபோது போலீசார் அந்த முயற்சியைத்தடுத்து விட்டனர். சாமியாரையும் அந்த ஆசிரமத்தை விட்டே வெளியேற்றினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஆசிரமத்திற்கு வந்துள்ளார் பாலுச்சாமி. பக்தர்களுக்கு ஆசிவழங்கி வரும் அவர், போலீசார் என்னை விரட்டினாலும் நான் ஜீவ சமாதி அடையப் போவது உறுதிஎன்று கூறி வருகிறார்.
சாமியார் எப்படியும் விரைவில் ஜீவ சமாதி அடைந்து விடுவார் என அவருடைய சீடர்களும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஆசிரமத்திற்குள் யாரும்போகலாம், வரலாம் என்றும் மற்ற நேரங்களில் யாரும் ஆசிரமத்திற்குள்ளேயே இருக்கக் கூடாதுஎன்றும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
மேலும் சில போலீசார் மாறு வேடத்தில் பாலுச்சாமி சாமியாரைத் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
-->