பெண் சிசுவைக் கொன்ற பெற்றோர், பாட்டிக்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பெண் சிசுவைக் கொலை செய்த அதன் பெற்றோர் மற்றும் பாட்டிக்கு ஆயுள் தண்டனை வழங்கிசேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்குக் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அது பெண் குழந்தையாக இருந்ததால் வெறுப்படைந்த முருகேசனின் தாய் எருக்கம்பாலைஊட்டி அந்தக் குழந்தையைக் கொன்றாள். இதற்கு முருகேசன் மற்றும் அவருடைய மனைவி கலைச்செல்வி ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.
இதையடுத்து முருகேசன், கலைச் செல்வி மற்றும் முருகேசனின் தாய் ஆகிய மூவர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சேலம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனைஅளித்து தீர்ப்பளித்தது.
பெண் சிசுக் கொலை வழக்கில் முதல் முறையாக இவர்கள்தான் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications