For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரி தெருக்களில் சுற்றித் திரிந்த 23 மன நோயாளிகள் மீட்பு

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த 23 மன நோயாளிகளை போலீசார் மீட்டனர். அவர்கள்அனைவரையும் சென்னை-கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசினர் மருத்துவமனையில் சேர்க்கநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரியில் ஏராளமான மன நோயாளிகள் சுற்றித் திரிவதாகவும், அவர்களுடைய நிலைமிகவும் பரிதாபமாக உள்ளதாகவும் மனித உரிமை கமிஷனுக்குக் கடிதங்கள் வந்தன.

மன நிலை பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய உறவினர்கள் கன்னியாகுமரிக்கு அழைத்துவந்து அங்கு விட்டுவிட்டுச் சென்று விடுவது வழக்கமாகி வருகிறது.

இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட மன நோயாளிகள் கன்னியாகுமரியில் தெருக்களில் சுற்றிவருகின்றனர். இவர்களைக் கண்டுபிடித்து மீட்க போலீசாருக்கு மனித உரிமை கமிஷன்உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 23 மனநோயாளிகளைப் போலீசார் மீட்டுள்ளனர். இவர்களில் சில பெண்களும் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைசென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நீதிபதிஉத்தரவிட்டார்.

இதையடுத்து 23 மன நோயாளிகளையும் சென்னைக்குக் கொண்டு செல்வதற்கானநடவடிக்கைகளைப் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X