சொத்து குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விடுதலை
சென்னை:
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமைநீதிபதி வீராசாமி விடுதலை செய்யப்பட்டார். சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்இது தொடர்பாக நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதி வீராசாமி கடந்த 1969 முதல் 1976 வரை ரூ.6,41,416 மதிப்புள்ள சொத்துக்களைவருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி, வழக்கு பதிவு செய்தது.
1977ல் வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் கடந்த 1997ம் ஆண்டுதான் இவ்வழக்கின் சாட்சிவிசாரணைகள் துவங்கின.
அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி ராமசாமி நேற்று தீர்ப்பளித்தார்.அந்தத் தீர்ப்பில்,
குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி வீராசாமிக்குச் சொந்தமான அசையும் சொத்துக்கள், அசையாசொத்துக்கள், செலவுகள் அனைத்தும் சேர்ந்து ரூ.5,79,010 என அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் மதிப்பு ரூ.17.36 லட்சம் என சி.பி.ஐ. கூறியுள்ளது.
மேலும் நீதிபதி வீராசாமியின் வருமானம் ரூ.4.87 லட்சம் என்று குற்றப்பத்திரிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விசாரணையின்போது சி.பி.ஐ. வேறு குறைந்த தொகையையேதெரிவித்துள்ளது. இதை ஏற்க முடியாது.
நீதிபதி வீராசாமியின் உண்மையான வருமானத்தை சி.பி.ஐ. வேண்டுமென்றே குறிப்பிடாததால்சொத்துக்கள் தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள வாக்குமூலத்தையே நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சி.பி.ஐ. தவறிவிட்டதால் நீதிபதி வீராசாமிகுற்றமற்றவர் எனத் தீர்மானித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன் என்று தன் தீர்ப்பில்நீதிபதி ராமசாமி கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications