பொடா வழக்கு: நெடுமாறன் ஜாமீன் மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறனின் ஜாமீன் மனு மீதான திர்ப்பு வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் கடந்த ஆண்டு ஆகஸ்டு 1ம் தேதி கைதுசெய்யப்பட்ட நெடுமாறன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சுப வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன், பாவாணன்,பரந்தாமன் மற்றும் சாகுல் ஹமீது ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி இவர்கள் 6 பேரும்சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு மீதான விசாரணை கடந்த 1ம் தேதியுடன் முடிவடைந்தாலும், தீர்ப்பு அளிக்கப்படும் தேதிபல முறை தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. நேற்று இதன் மீதான தீர்ப்பு அளிக்கப்படும்என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. வரும் 21ம் தேதி இம்மனு மீதான தீர்ப்புவழங்கப்படும் என்று நீதிபதி ராஜேந்திரன் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications