இந்தியாவில் 2வது சார்ஸ் நோயாளி: ஹாங்காங்கில் 12 பேர் பலி
டெல்லி:
தாய்லாந்தில் இருந்து டெல்லி வந்த நியூசிலாந்தைச் சேர்ந்த பயணிக்கு சார்ஸ் இருப்பது உறுதியாகிவிட்டது.இதனால் இந்தியாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாகிவிட்டது.
இதற்கிடையே ஹாங்காங்கில் மேலும் 12 பேர் சார்ஸ் நோயால் பலியாகியுள்ளனர்.
சிங்கப்பூரில் மெரைன் என்ஜினியராகப் பணியாற்றிய கோவாவைச் சேர்ந்த பிரசீல் வார்தே சார்ஸ் நோயால்பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று தான்டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவரை சார்ஸ் வைரஸ்களின சக்தியில்லாத வைரஸ் தான் (milder version)தாக்கியதாகத் தெரியவந்துள்ளது. இதனால் அவர் உடனடியாக பூரண குணம் அடைந்துவிட்டார். சார்ஸ்நோயாக்கான மூச்சுத் திணறல் அறிகுறி அவருக்கு ஏற்படவேயில்லை.
இந் நிலையில் 3 நாட்களுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து டெல்லி வந்த நியூசிலாந்தைச் சேர்ந்தராஸ் என்ற பயணிக்கு அதிகமான காய்ச்சலும் லேசான மூச்சுத் திணறலும் இருந்தது.
தாய்லாந்தில் இருந்து வந்ததால் சந்தேகமடைந்த விமான நிலைய மருத்துவர்கள் அவரை நேரடியாக ராம் மனோகர்லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது ரத்தம், சளி, சிறுநீர் ஆகியவைபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் முடிவுகள் இன்று தான் தெரியவந்தன. அதில் அவருக்கு சார்ஸ் நோய் இருப்பது உறுதியாகிவிட்டது. 42வயதான இவருடன் விமானத்தில் அருகில் அமர்ந்து வந்தவர் குறித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரைக் கண்டுபிடித்து அவருக்கும் சார்ஸ் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய்ஆய்வுக் கழக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில்...
இதற்கிடையே சார்ஸ் நோய்க்கு இன்று மட்டும் 12 பேர் பலியாகி உள்ளதாக ஹாங்காங் அரசு கூறியுள்ளது.இதனால் ஹாங்காங்கில் இந்த நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துவிட்டது. மேலும் 31பேர் இன்று சார்ஸ் நோயுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 1,358 பேர் ஹாங்காங்கில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பலியான 12 பேரில் 7 பேர்முதியவர்கள். மற்ற 5 பேரும் மிக இளம் வயதினராவர்.
இதற்கிடையே சார்ஸ் நோயால் தாக்கப்பட்டு இந்தோனேஷியாத் தலைநகர் ஜகார்த்தாவில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது பெண் இன்று அங்கிருந்து தப்பிவிட்டார். அவரும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலி தீவில் உள்ள சங்க்லா மருத்துவமனையில் இருந்து அவர் தப்பினார். அவரது பெயர் ஜெசிக்கா வோங் என்றுமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.