For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 15ம் தேதி இந்திய- இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

எதிர்காலத்தில் இந்திய- இலங்கை மீனவர்கள் இடையிலான மோதலைத் தவிர்ப்பது குறித்து வரும் மே 15ம் தேதிஇரு நாட்டு மீனவர்களும் நேரில் சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.

பாக் ஜலசந்தியில் இரு நாட்டு மீனவர்களும் மோதலில் ஈடுபடாமல் மீன் பிடிப்பது குறித்து அப்போது சிலவிதிமுறைகள் வகுக்கப்படும்.

தென்னிந்திய மீனவர் சங்கமும் இலங்கை மீனவர் சங்கமும் தலைமன்னாரில் இந்தப் பேச்சுவார்த்தையைநடத்தவுள்ளன.

நாகர்கோவில், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள் இந்தப்பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பர்.

இலங்கை சார்பில் மன்னார் மீனவர் சங்கத்தினரும் சில எம்.பிக்களும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவர். இத்தகவலை மன்னார் மீனவர் சங்கத் தலைவர் தன்சிலால் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் முழுக்க முழுக்க மீனவர் அமைப்புகளால் தான்மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது இலங்கை அரசோ இதில் எந்த உதவியும்செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை:

இதற்கிடையே இலங்கை சிறைகளில் அடைபட்டு வாடி வரும் தமிழக மீனவர்கள் 30 பேரை மீட்க தீவிரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அப்பாவி மீனவர் மீட்பு இயக்கம் என்ற அமைப்பு கூறியுள்ளது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்.

கொழும்புவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் 30 மீனவர்களை மீட்பது தொடர்பாக நேரில் பேச முடிவுசெய்துள்ளோம். இந்த 30 பேரில் நான்கு பேர் நாகப்பட்டனம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 26 பேர்ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்திக்க கொழும்பு செல்லும் குழுவில் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும்இடம் பெறுவார்கள். ராமநாதபுரம் கடல் பகுதியில் இந்திய மீனவர்களுக்கு உள்ள மீன் பிடி உரிமை குறித்தும்அப்போது விவாதிக்கப்படும் என்றார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X